வாலிப பருவத்தில் நான் என் நண்பர்களுடன் அரசியல் பேசும் பொழுதது சொல்வதுண்டு, “இஸ்லாமியர்களுக்கு அல்லது கிறிஸ்துவர்களுக்கு எதிராக ஒரு ஹிந்து இருந்தால் அதை முதலில் ஒரு ஹிந்து கண்டிக்க வேண்டும், அது எப்போதும் எப்படியும் இந்தியாவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே போல் ஹிந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்துவரோ அல்லது கடவுள் இல்லை என்கிற பெயரில் அரசியல் செய்கிறவர்களோ நடந்து கொள்ளும் பொழுது ஹிந்துக்கள் அல்லாதவர்கள் அதை முதலில் எதிர்க்க வேண்டும். அது ஏனோ இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அரிதாகவே தான் நடக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்கிற போர்வையில் அரசியல் செய்யும் திமுக என்பதை மறுக்க முடியாது.

 

திமுகவினரோ அல்லது அவர்கள் சார்ந்த மற்றவர்களோ ஹிந்து மதத்திற்கு எதிராக எது செய்தாலும் என்ன பேசினாலும் அது மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கெடுப்பதாக எடுத்துக்கொள்ளப்படுவதேயில்லை.

 

மாறாக, சில சட்டங்களில் சிறிய அளவில் ஒரு மாற்றம் கொண்டுவந்தாலும்,’ஐயோ கொல்லறாங்க புகழ்’ கூட்டம், சிறுபான்மையினராக இந்தியாவை விட்டு விரட்ட பார்க்கிறார்கள் என்று பீதியை கிளப்பி அரசியல் செய்கிறது.

 

 

மத வெறி, மத வெறுப்பு, அப்புறம் இந்த ஒன்றிய அரசாங்கத்தை குறை சொல்ல தமிழகம் வைத்திருக்கும் ஓரே பிரம்மாஸத்திரமான ‘பிரிவினைவாதம்’ இவைகளுக்கு எல்லாம் பாஜகவின் செயல்பாடுகளை விட திமுகவின் செயல்பாடுகளை உதரணமாக சொல்லலாம்.

இப்பொழுது என்ன நடந்து விட்டது. திமுகவை குறை கூறி என்ன ஆகிறது? என்று நீங்கள் கேட்க காரணம், திமுக ஏற்படுத்தி வைத்திருக்கும் மாய உலகத்தில் வாழும் திராவிடியன் ஸ்டாக்குகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறவர்கள் காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக பேசும் கருத்துக்கள்.

நாம் நடந்ததை நடந்தது போலவே ஏற்றுக்கொண்டு பழகத் தவறுகிறோம். பயங்கரவாத தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்வதால் என்ன மாறிவிடும் என்று சிந்திக்க தவறுகிறோம்.

அண்மையில் அமரன் திரைப்படம் வெளியான சமயத்தில் அத்திரைப்படம் பற்றி மண்ணுரிமை போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் நுண்ணரசியல் பேசும் படம் என்று இயக்குனர் கோபி நயினார் கருத்து தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் இப்படியான ஒரு மனநிலையை பெரும்பாலனவர்கள் மனதில் திமுக வளர்த்து வைத்திருக்கிறது.

காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படாமலேதான் இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே என்று வசந்த பாலன் கருத்து தெரிவித்து இருந்தார்.

எந்த மண்ணின் மண்ணுரிமை போராளிகள் ஒரு குழந்தை முன்பு மதத்தை கேட்டு தெரிந்து கொண்டு அந்த குழந்தையின் தந்தையை கொன்றுவிட்டு சிரிப்பார்கள்? இப்படியானவர்களிடம் என்ன மாதிரியான அரசியலை பேச வேண்டும்.

மதத்தின் பெயர் சொல்லி பிரிந்து சென்றவர்கள் எப்படி மண்ணுரிமை போராளிகள் ஆவார்கள். தீடீரென்று நடிகை ஆன்ட்ரியா அரசியல் பேசுகிறார் பாதிப்பை ஏற்படுத்தியவர்களை காயப்படுத்தக்கூடாது என்கிற தெளிவோடு கருத்து தெரிவித்து இருக்கிறார்.

 

ஹிந்து கடவுள்களின் படங்களை வைத்துக்கொண்டு அரசியல் பேசினால் சங்கி, பொத்தாம் பொதுவாக மத்திய அரசின் எல்லா செயல்பாடுகளையும் விமர்சிக்காதீர்கள் என்கிறவர்களெல்லாம் சங்கி என்று பொதுமைபடுத்துகிற கூட்டம் தான் யாரும் எதையும் பொதுமைபடுத்தாமல் இருக்கும் பொழுதே, வெறுப்பை பரப்பி விடாதீர்கள் என்று கிளம்பி வருகிறது.

இந்த விஷயத்தில் AIMIM கட்சியின் தலைவர் ஓவைசி என் மரியாதையை பெற்ற அரசியல்வாதியாக ஆகிறார். 140 கோடி பேரும் ஓரே மாதிரியான சிந்தனை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை , ஆனால் 140 கோடி நாம் இந்தியர்கள் என்பதை மறக்காமல் இருந்தால் போதும்.

குடியுரியுமை சட்டத்திருத்த திருத்திற்கு எதிராக வக்பு சட்டத்திருத்திற்கு எதிராக என்று அரசாங்கத்தின் எந்நதெந்த நடவடிக்கை எல்லாம் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று அவர் எடுத்துக்கொள்கிறாரோ அதற்கு எதிராக எல்லாம் இந்திய அரசயிலைமப்பின் இந்த சிஸ்டத்திற்குள் இருந்த படியே எதிர்ப்பை பதிவு செய்து சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார். மக்களிடம் அச்சத்தையோ குழப்பத்தையோ ஏற்படுத்தி ஆதாயம் தேடும் அரசியலை அவர் செய்ததாக தெரியவில்லை.

 

ஏதோ ஒரு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு விடை பெறும் தருணத்தில் மேடையேறி ஒருவர் பாகிஸ்தான்ஜிந்தாபாத் என்று முழங்கவும் பதறிக்கொண்டு அவரை தடுக்க முற்படுகிறார்.

 

அவுட் ஆகாமலையே அவுட் என்று நினைத்துக்கொண்டு வெளியேறிய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷான் போல் அநியாயதிற்கு நியாயமாக இருப்பதை போல காட்டிக்கொள்ள நினைக்கும் திராவிட போராளிகள் திராவிட ஸ்டாக்குகள் போல் அவர் இருந்ததில்லை. அதற்கான அரசியல் அவசியமும் அவருக்கு இல்லை.

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்பை பதிவு செய்ததோடு உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டங்களை நடத்திவரும் அவர், நம் மாநிலத்தில் உள்ள சிலரை போல் பூசி மொழுகாமல், யாருக்கும் வலிக்கூடாது என்றெல்லாம் எண்ணாமல், பஹல்காம் தாக்குதலில் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்போம், தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும், சர்வதேச சட்டம் அதற்கு அனுமதியளிக்கிறது என்று பேசியிருக்கிறார்.

மேலும் அவர் , உரி புல்வாமா தாக்குதலை காட்டிலும் இது கண்டதுக்குரியது மதத்தை உறுதிபடுத்திக்கொண்டு தான் கொன்றிருக்கிறார்கள் என்று தன் கண்டனங்களை தயக்கமில்லாமல் பதிவு செய்ததோடு இது உளவுத்துறையின் தோல்வி; மோடி அரசாங்கம் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

 

நிச்சயமாக இது உளவுத்துறையின் தோல்வி என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான் எனினும்; ஏளனத்துக்குரியதோ கேலிக்குரியதோ அல்ல. இங்கே ஏதோ ஆர்.சி.பி அணி சி.எஸ்.கே எதிராக தோற்றதை கொண்டாடி கேலி செய்வதை போல், இது உளவுத்துறையின் தோல்வி அதை பேசாமல் பிரச்சனையை மடை மாற்றி மத வெறுப்பு பரப்படுகிறது என்று ஒரு கூட்டம் பேசிக்கொண்டு இருக்கிறது.

 

யாரும் இங்கே எதையும் மடை மாற்றவில்லை, உளவுத்துறை ஆயிரம் அசம்பாவிதங்களை தடுத்திருக்கும், உளவுத்துறையால் தடுக்கமுடியாத தவிர்க்க முடியாத இத்தகைய அசம்பாவிதங்களை அரசியல் வன்மமங்களின் பொருட்டு ஏளனம் செய்வது என்ன மாதிரியான மனநிலை.

 

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைளில் தவறுகளுக்கு இடமில்லை தான் ஆனாலும் இப்படியான அசம்பாவிதங்கள் அவ்வப்பொழுது நிகழ்தேறுவதை இந்திய சமூகம் இன்னமும் தவிர்கக முடியாமல் இருக்கிறது, தமிழகத்தில் சிலிண்டர் வெடிப்பு ஹைதராபாத் குண்டு வெடிப்பு, தாஜ் ஹோட்டல் தாக்குதல் நாடாளுமன்ற தாக்குதல் என்று கட்சி வேறுபாடுகளின்றி மீண்டும் மீண்டும் இது நடந்து கொண்டே இருக்கிறது, எப்போதும் நாம் பதிலடி கொடுக்கும் இடத்தில் தான் இருக்கிறோம். ஏன் தவிர்க்க முடியாமல் இது மீண்டும் மீண்டும் நடக்கிறது, ஏன் நாம் பதிலடி கொடுப்பதற்கு மட்டுமே காத்திருக்கிறோம்; காஷ்மீர் மாதிரி பயங்கரவாதிகளால் அசம்பாவிதம் நிகழ கூடிய மாநிலத்திலேயே இராணுவம் சம்பவ இடத்திற்கு வருவதற்கு ஏன் இருபது நிமிடம் ஆனது, இதையெல்லாம் நாம் விவாதிக்க வேண்டும் இதையெல்லாம் தான் சரி செய்து கொள்ள வேண்டும். நாட்டின் எந்த ஒரு மூலையில் தாக்குதல் நடந்தாலும் இராணுவம் அங்கே விரைவதற்கு ஏதுவாய் நாம் நம்முடைய கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

 

சிந்து நதி நீரை இந்திய அரசாங்கம் நிறுத்தி வைத்திருப்பதை நாம் நிச்சயமாக எதிர்க்கிறோம். ஆயுதம் ஏந்தாத குடிமக்களை பயங்கரவாதிகள் தாக்குவது எப்படி கோழைத்தனமாக பார்க்கப்படுகிறதோ அதை ஒத்ததாகவே இதை நாம் பார்க்கிறோம். நதி நீரை நிறுத்தி வைப்பது இராஜாங்க ரீதியாக எதிர்ப்பை காட்டும் போக்காக அறியப்பட்டாடலும் அதை நிர்வாகத்தின் மடைமையாக நாம் கருதுகிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் செயலுக்களுக்காக அந்நாட்டு அப்பாவி மக்களை தண்டிக்கும் செயலாக நாம் இதை பார்க்கிறோம். பாகிஸ்தான் தீவரவாதிகளை வளர்க்கிறது ஆதரிக்கிறது என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடாக எப்போதும் இருந்து இருக்கிறது. இப்படியான சூழலில் நதி நீரை நிறுத்திவைப்பது என்பது தீவிரவாதிகளை வளர்ப்பவர்களுக்கு சாதகமாகவும் இந்தியாவிற்கு எதிராக ஆள் சேர்பதற்கு தோதாகவும் தான் அமையும் என்று நாம் நம்புகிறறோம்.

 

இதிலும், ஒவைசி சரியான கருத்தை எடுத்து வைத்திருந்தார், நதி நீரை நிறுத்தி வைத்தீர்கள் சரி நீரை எங்கு தேக்குவீர்கள்? அவர் கேட்டது போல் நம்மால் எத்தனை நாட்களுக்கு தேக்கி வைக்கும் முடியும் இன்னும் சில நாட்களில் நாமே நதி நீரை திறந்துவிடும் சூழல் ஏற்பட்டால் நம்முடைய இந்த நடவடிக்கை நகைப்புக்குள்ளாகாதா?

இது அவசர கதியில் எல்லா விதத்திலும் அவர்களுக்கு நம் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்கிற முனைப்பில்  எடுக்கப்பட்ட முடிவாகவே தெரிகிறது. இதை தவிர்த்திருக்க வேண்டும்.

ஆர்டிக்கிள் 370

மிகவும் பாதுகாப்பான சூழலில் உட்கார்ந்து கொண்டு  தாக்குதலில் இறந்த போன ஒரு இந்திய இஸ்லாமியரையும் சேர்த்து இந்தியர்களுக்காக சீற்றம் கொள்ள வேண்டிய தருணத்தில் ஆர்டிக்கிள் 370 தூக்கி கொண்டு வருகிறார் திருமாவளவன்.

ஆர்க்கிள் 370தற்காலிகமானது என்று அம்பேத்கர் தலைமயில் வகுக்கப்பட்ட இந்திய அரசியலைமைப்பு சொல்கிறது. பாஜகவோ காங்கிரஸோ அல்லது வேறு தேசிய கட்சிகளோ தன்னிட்சையாகவோ தான்தோன்றித்தனமாகவோ சொல்லவில்லை.

ஆர்டிக்கிள் 370 நடைமுறையில் இருந்தவரையில் காஷ்மீரில் மோடி அதிகாரம் செலுத்த முடியவில்லை என்பதற்காக அது நீக்கப்படவில்லை, ஆர்டிக்கிள் 370 நடைமுறையில் இருக்கும் வரையில் இந்திய ஆளுகைக்குட்டப்பட்ட ஒரு நிலவரையில், இந்திய அரசியலமைப்பு முழுமையாக அதிகாரம் செழுத்த முடியவில்லை என்பதற்காக அது நீக்கப்பட்டது, அங்கு நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக இந்திய அரசியலமைப்பு முழு அதிகாரத்தையும் பயன்படுத்த தேவை இருக்கிறது என்கிற பொருளில் முன்வைக்கப்பட்ட கருத்தை எடுத்து கொண்டு இன்று அரசியல் பேசுவது என்ன மாதிரியான அரசியல் நாகரீகம். “நீ கீழ விழ மாட்ட ன்னு சொன்ன விழுதுட்ட” என்று சிரிப்பதை போல் உள்ளது. ஒரு சீட்டு இரண்டு சீட்டுக்காக இப்படியான கருத்துக்களை பேசிக்கொண்டிருப்பதற்கு தயவுசெய்து அரசியலை விட்டு விலகிவிடுங்கள் வளவன் அவர்களே.

 

இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள் என்று மொத்தத்தில்  இந்தியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இந்தியர்களாக நம் அத்தனை பேருள்ளும் மத வேறுபாடுகளின்றி ஒரு சோகம் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும். ஓவைசி கொண்ட சீற்றம் எல்லாருள்ளும் பற்றியிருக்க வேண்டும் மாறாக கேலி பேசிக்கொண்டிருக்கிறோம்.

 

பயங்கரவாதிகளுக்கு மண்ணுரிமை போராளிகள் என்று மூலாம் பூசம் இயக்குனர்களுக்கும், அரசியல் பேசி பழகும் ஆன்ட்ரியாக்களும் ஒன்றை தெளிவுப்படுத்த விழைகிறேன்.பாஜகவின் கடந்த பத்தாண்டு ஆட்சிக்காலத்தையும் சேர்த்து இந்தியா அம்பேத்கர் தந்த அரசியலமைப்பின் படி தான் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது. இங்கே எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதோடு காங்கிரஸ் பாஜக என்று யார் ஆட்சி செய்தாலும் தோதாக அரசை குறை கூறிக்கொண்டிருக்கும் சுதந்திரத்தை பெற்றுள்ளோம். அத்தகைய இந்தியாவின் வரைபடத்தில் காஷ்மீர் இருக்கும் வரை சிறுபான்மையினராக ஹிந்துக்கள் இருந்தாலும் முஸ்லிம்கள் இருந்தாலும் கூடுமானவரையில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவுமே தான் இருப்பார்கள்.

இதே காஷ்மீர் பாகிஸ்தானின் வரைபடத்தில் இருந்திருக்குமானால் என்ன நடக்கும் என்பதை நீங்களே உங்களுக்குள் இருக்கும் உங்கள் அறிவிடம் கேட்டு தெளியுங்கள்.

 

கிறிஸ்துவரான யூசப் யுகானா என்கிற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மதம் மாறிய பொழுது கிரிக்கெட்டை விட எதுவும் பெரிதில்லை என்றார்.பல வருடங்கள் கழித்து அண்மையில் விரும்பி தான் மதம் மாறினேன் என்று பேசியிருக்கிறார். சிறுபான்மையினர் எங்கே சுதந்திரம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அப்படியான ஒரு நாட்டில் இருந்து மதம் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருந்தால் அவர்களுக்கு குடியரிமை வழங்கலாம் என்கிற சட்டதிருத்தத்தை சமூக நீதி காவலர்கள் சிறுபான்யினரின் பாதுகாவலர்கள் ஆதரித்து இருக்க வேண்டும். ஆனால் அரசியல் செய்து கொண்டிருந்தார்கள்.

சமீபத்திய இந்த தாக்குதல், தேசிய குடியரிமை பதிவேடு அவசியத்தை உணர்த்துகிறது, அதோடு அண்டை நாடான பாகிஸ்தானில் மதத்தின் பெயரால் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக அமைந்த குடியுரிமை சட்டத்திருத்தம் சரி என்று பறைசாற்றுகிறது.

குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்து நாட்கள் ஆகிவிட்டது. தமிழகத்யில் உள்ள திராவிட ஸ்டாக்குகள் கிளப்பிய வதந்ததிகள் போல் இன்னமும்  எந்த இந்தியர்களையும்  இந்தியா வெளியேற்றவில்லை மாறாக சமய நம்பிக்கைகளின் பெயர் சொல்லி யாரோ ஒருவர் கொல்லப்பட்டிருக்க வேண்டியதை தடுத்து அடைக்கலம் தந்து இருக்கிறது.

 

என் அறிவிற்கு எட்டிய வரையில், இன்று வரை நான் கற்றறிந்த கொண்டதன் படி இதற்கெல்லாம் நிரந்தர தீர்வாக இருக்கம் என்று நான் நம்புவது, “நதி நீரை நிறுத்தும் நடவடிக்களை ஒழித்துவிட்டு பாகிஸ்தானை மீட்டு இந்தியாவுடன் இணைத்து விடுவது தான், ஆர்டிக்கிள் 370 போன்று பாகிஸ்தானுக்கு ஒரு சிறப்பு அந்தஸ்த்தை கொடுத்து இந்தியாவுடன் இணைத்துக்கொள்வது தான் சரியாக இருக்கும்”. கட்ச தீவு மீட்பை விட அவசரமான தேவை பாகிஸ்தான் எனும் பெரும் இந்திய நிலப்பரப்பை மீட்டெடுப்பது.இராணுவம் கொண்டேனும் அதை செயல்படுத்தி விட வேண்டம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *